Skip to main content
அந்த "மூன்று நாட்கள்"
தள்ளிப் போய்
உன் வருகையை
உணர்த்தின...

தொடர்ந்து வந்த
வாந்தியும் மயக்கமும்
உன் இருத்தலை
உறுதிப்படுத்தின...

பால்கனிகளின் படைப்பு
உன்னதமானது
மதிப்பு புரிந்தது
மரியாதை கூடியது...

பாவாடை நாடாவைக் கூட
பார்த்து பார்த்து பக்குவமாக
கட்டினேன்..

தொப்புள் கொடி பாதையைத்
தொட்டு தொட்டு
மெய் சிலிர்த்தேன்...

வயிற்றில் நீ எட்டி
உதைத்தால் வலியிலும்
ஆனந்தம் கண்டேன்...

இன்று
அதிக வலி கொடுக்க ஆரம்பித்துவிட்டாய்..
இதற்கு மேல் உன்னால் என்னை பார்க்காமல்
இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறாய்..
புரிகிறது.. எனக்கும் தான்...

நம் தொப்புள் கொடியை பிடித்து வெளியே வா...
உன் தலையை என் சிறிய துவாரங்களின் வழியே செலுத்து..
பச்சை வண்ண முகமூடி அணிந்திருப்பவர்களை பார்த்து பயப்படுகிறாயா..
பயப்படாதே நான் இருக்கிறேன்..
அவர்கள் மருத்துவர்கள்...
வெளிச்சம் கண்களை கூசுகிறதா..?
கண்களை மூடிக் கொள்...

என் வலியைப் பார்த்து கவலை கொள்ளாதே...
இது உன் பிறப்பிற்காக
நீ எனக்கு கொடுக்கும்
சன்மானம்...
நான் விரும்பி ஏற்கும்
வெகுமானம்...

வந்துவிட்டாய்.. இந்த உலகத்தில் பாதம் பதித்துவிட்டாய்...

உனக்கும் எனக்குமான பந்தம்
அந்த மூன்று நாட்கள் தள்ளிப் போனதில் தொடங்கி
பிறகு முந்நூறு நாட்கள் தள்ளி 
இன்று முழுமைப் பெற்றிருக்கிறது...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...