அழகுடன் கூடிய ஆபத்தான இடங்கள்; சுற்றுலா தளங்கள்; குறுகிய சாலை வளைவுகள்; கொண்டை ஊசி வளைவுகள் போன்ற இடங்களில் அதிக கவனமாக இருப்பதற்காக, இது "Accident Zone" என்று அறிவிப்புபலகை பொதுவாக வைக்கப்பட்டிருக்கும்...
"எல்லாம் சிவமயம்" என்பது மாறி "எல்லாம் செல்பிமயம்" என்று உலகமே உருண்டுக் கொண்டிருக்கின்றது...
ஆரம்பத்தில் ஆனந்தமான வரமாய் வலம் வந்து கொண்டிருந்த இந்த செல்பி, இன்று அதிரடியான சாபமாய் மாறத் தொடங்கியுள்ளது...
ஆம்... பெரும்பாலனோர் வித்தியாசமான மற்றும் புதுமையான முறையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு, அது பெரும் ஆபத்திலோ அல்லது விபத்திலோ முடிவடைவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...
கடந்த வருடம் ஜனவரி மாதம், தாஜ்மஹாலைக் கண்டுரசிக்க காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்த 20 முதல் 22 வயதையொத்த இளைஞர்கள் சிலர், வேகமாக வந்துக் கொண்டிருக்கும் ரயிலின் முன்நின்று செல்பி எடுக்க முயன்று ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...
சில மாதங்களுக்கு முன்பு, ஒகேனக்கலில் இயற்கையை ரசிக்க பரிசலில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் செல்பி எடுக்க ஆசைப்பட்டு, பரிசலின் ஒரே முனையை நோக்கி எல்லோரும் குவிய, பாரம் தாங்காமல் பரிசல் நீரில் மூழ்கியது... இதில் பரிசலில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்...
சென்னையில் நேற்று, மின்சார ரயிலில் படியில் தொங்கிக் கொண்டே பயணித்த இளைஞன் ஒருவன், படியில் தொங்கியபடியே செல்பி எடுக்க முயன்று, ஓடும் ரயிலிலிருந்து விழுந்து உயிரிழந்தான்...
இதுப்போல இன்னும் நிறைய எதிர்பாராத விபத்துக்கள் செல்பியினால் நாள்தோறும் நிகழ்ந்துக் கொண்டேயுள்ளன...
இதில் இன்னும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், "தி வாஷிங்டன் போஸ்ட்" என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்திய ஆய்வில், "கடந்த வருடத்தில் செல்பி எடுக்க முயன்ற காரணத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிகையில், உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளது"... மொத்த எண்ணிக்கையில் பாதிக்குப் பாதி மரணம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது...
அதே போல, செல்பிக்கு அடிமையாகி இருப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மற்றொரு ஆய்வுக் கூறுகிறது...
இதை தவிர்க்க, செல்பி எடுக்க தூண்டும் உணர்வைக் குறைக்க, "ஆண்ட்டி செல்பி மாத்திரைகள்" சந்தைக்கு வந்துள்ளன... இதை குடித்தால் செல்பி எடுக்கத் தூண்டும் உணர்வு கட்டுப்படுத்தப்படுமாம்... புற்று நோய், காச நோய், சக்கரை நோய் போல செல்பியும் ஒரு நோயாக பரவி வருகிறது... சொல்லப்போனால் மற்ற நோய்களை விட, இது வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக இருக்கிறது...
பெற்றோர்களை சக்கரை நோயிலிருந்தும், பிள்ளைகளை செல்பி நோயிலிருந்தும் காக்க வேண்டிய சமூகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உருவாகிக் கொண்டிருக்கிறது...
அதி தீவிரம் அடைய விடாமல், இப்பொழுதில் இருந்தே செல்பி நோயை வளர விடாமல் குறைப்போம்... ஆபத்தான இடங்களில் விபரிதமான முயற்சிகளை தவிர்ப்போம்... உயிரிழப்புகளைத் தடுப்போம்...
கார்த்திக் பிரகாசம்...
அந்த காலமெல்லாம் இப்பொழுது மலையேறிப் போய் "No Selfie Zone" என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது...
"எல்லாம் சிவமயம்" என்பது மாறி "எல்லாம் செல்பிமயம்" என்று உலகமே உருண்டுக் கொண்டிருக்கின்றது...
ஆரம்பத்தில் ஆனந்தமான வரமாய் வலம் வந்து கொண்டிருந்த இந்த செல்பி, இன்று அதிரடியான சாபமாய் மாறத் தொடங்கியுள்ளது...
ஆம்... பெரும்பாலனோர் வித்தியாசமான மற்றும் புதுமையான முறையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு, அது பெரும் ஆபத்திலோ அல்லது விபத்திலோ முடிவடைவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...
கடந்த வருடம் ஜனவரி மாதம், தாஜ்மஹாலைக் கண்டுரசிக்க காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்த 20 முதல் 22 வயதையொத்த இளைஞர்கள் சிலர், வேகமாக வந்துக் கொண்டிருக்கும் ரயிலின் முன்நின்று செல்பி எடுக்க முயன்று ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...
சில மாதங்களுக்கு முன்பு, ஒகேனக்கலில் இயற்கையை ரசிக்க பரிசலில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் செல்பி எடுக்க ஆசைப்பட்டு, பரிசலின் ஒரே முனையை நோக்கி எல்லோரும் குவிய, பாரம் தாங்காமல் பரிசல் நீரில் மூழ்கியது... இதில் பரிசலில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்...
சென்னையில் நேற்று, மின்சார ரயிலில் படியில் தொங்கிக் கொண்டே பயணித்த இளைஞன் ஒருவன், படியில் தொங்கியபடியே செல்பி எடுக்க முயன்று, ஓடும் ரயிலிலிருந்து விழுந்து உயிரிழந்தான்...
இதுப்போல இன்னும் நிறைய எதிர்பாராத விபத்துக்கள் செல்பியினால் நாள்தோறும் நிகழ்ந்துக் கொண்டேயுள்ளன...
இதில் இன்னும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், "தி வாஷிங்டன் போஸ்ட்" என்ற ஆங்கில பத்திரிக்கை நடத்திய ஆய்வில், "கடந்த வருடத்தில் செல்பி எடுக்க முயன்ற காரணத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிகையில், உலகிலேயே இந்தியா முதல் இடத்தில் உள்ளது"... மொத்த எண்ணிக்கையில் பாதிக்குப் பாதி மரணம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது...
அதே போல, செல்பிக்கு அடிமையாகி இருப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மற்றொரு ஆய்வுக் கூறுகிறது...
இதை தவிர்க்க, செல்பி எடுக்க தூண்டும் உணர்வைக் குறைக்க, "ஆண்ட்டி செல்பி மாத்திரைகள்" சந்தைக்கு வந்துள்ளன... இதை குடித்தால் செல்பி எடுக்கத் தூண்டும் உணர்வு கட்டுப்படுத்தப்படுமாம்... புற்று நோய், காச நோய், சக்கரை நோய் போல செல்பியும் ஒரு நோயாக பரவி வருகிறது... சொல்லப்போனால் மற்ற நோய்களை விட, இது வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக இருக்கிறது...
பெற்றோர்களை சக்கரை நோயிலிருந்தும், பிள்ளைகளை செல்பி நோயிலிருந்தும் காக்க வேண்டிய சமூகப் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உருவாகிக் கொண்டிருக்கிறது...
அதி தீவிரம் அடைய விடாமல், இப்பொழுதில் இருந்தே செல்பி நோயை வளர விடாமல் குறைப்போம்... ஆபத்தான இடங்களில் விபரிதமான முயற்சிகளை தவிர்ப்போம்... உயிரிழப்புகளைத் தடுப்போம்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment