Skip to main content
கல்லூரி சேரும் வரையுலுமே அம்மா தான் அவனை சினிமாவிற்கு கூட்டிச் செல்வாள்... தங்கைக்கு சினிமா என்றால் அவ்வளவு பிடித்தம் இல்லை.. அதனால் சினிமா விசயத்தில் அவனும் அம்மாவும் மட்டும் தான் கூட்டு...

மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சின்ன கிளை ரோட்டின் கடைசி ஓரத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஸ்ரீமான் தியேட்டர்... சரியாக வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் இருக்கும்... ஆண்கள் பெண்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து அமர வேண்டும்.. பால்கனி டிக்கெட் எடுக்கும் வசதியுள்ள பணக்காரர்கள் மட்டும் ஒன்றாக டிக்கெட் எடுத்து அமர்ந்து கொள்ளலாம்... பால்கனி டிக்கெட் 12 ரூபாய்.. பெஞ்சு டிக்கெட் 8 ரூபாய்.. தரை டிக்கெட் 3 ரூபாய்.. தரை டிக்கெட் குறைவாகத் தான் கொடுப்பார்கள்.. அதனால் 2 30 மணிக்கு தொடங்கும் படத்திற்கு 1 மணிக்கே கூட்டிச் சென்று விடுவாள்...மதிய சாப்பாட்டை டப்பாவில் கட்டிக் கொண்டு போன நாட்கள் கூட உண்டு...

அவன் ரஜினி காந்தை அளவு கடந்து நேசிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை... ஏனென்றால் அவன் அம்மாவிற்கு ரஜினி, விஜய் படங்கள் என்றால் அவ்வளவு விருப்பம்.. எழுந்து நின்று கைத்தட்டி விசில் அடிக்காத ஒரே குறை தான்..

படையப்பா படத்தில் ரஜினி, "மணிவண்ணனைப் பார்த்து எங்க அம்மா என்ன சொல்றாங்களோ அதான் கடைசி" என்று சொல்லும் வசனத்தில், "ரஜினி, ரஜினி தான்" என்று பெருமிதப்பட்டுக் கொண்டாள்.. படையப்பா படத்திற்கு இரண்டாம் முறை செல்லும் போது, "ரஜினி படம் மட்டும் தான் எத்தன தடவ பாத்தாலும் சலிக்காது" என்று சொல்லி அவன் அப்பாவின் கோவத்திற்கு ஆளானாள்..

ஷாஜகான் திரைப்படத்தின் கடைசி காட்சியில் விஜய் அழுதுக் கொண்டிருக்கும் போது அவளும் சேர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்.. அப்பொழுது ஒரு தருணத்தில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு "அந்த பொண்ணு இல்லனா என்னா வேற நல்ல பொண்ணா கிடைப்பா, நீ அழாத விஜய்ன்னு" சமாதானமெல்லாம் செய்தாள்...

வேலைக்கு வந்து முதன்முறையாய் இன்று, அவன் அம்மாவை சினிமாவிற்குக் கூட்டிச் செல்கிறான் என்றதும்,மனதில் பொக்கிஷமாய் புதைந்து கிடந்த பல நினைவுகள் மீண்டும் உயிர் பெற்றன...

அம்மா.. நேரம் ஆச்சு மா.. சீக்கிரம் வா... !!!

தோ. வந்துட்டேன் டா... போலாம்...

டேய்... ரஜினி படத்துக்குத் தானே...???

அவன் சிரித்துக் கொண்டே...., மொதல்ல வண்டில ஏறு மா...!!!

அவனும் அம்மாவும் வண்டியில் கிளம்பினர்...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...