பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, இவனுக்கு புதன்கிழமை என்றாலே நெஞ்சம் படபடக்க துவங்கி விடும்... வயிறு கலக்க ஆரம்பித்து விடும்... புதன் கிழமை வந்தாலே அஞ்சி நடுங்கி, கடைசியில் ஒடுங்கியேப் போய்விடுவான்...
அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக, இவன் புதன் கிழமைகளையே வெறுத்துக் கொண்டிருந்தான்... நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் இவன் அப்பா எங்கிருந்தாலும், எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விடுவார்.. அதை இப்படியும் சொல்லலாம்.. இவனும் எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்தாக வேண்டும்...
அடுத்த ஒரு மணி நேரம், அந்தப் பிரபல ஆலோசகர் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிப்பார்... நடுவே நடுவே, "ஆவேசமாக 1000 மார்க்குகெல்லாம் எந்த காலேஜ்'ம் கிடைக்காது... 190 கட் ஆப் இல்லனா கவுன்சலிங் போறதே வேஸ்ட்... அது இது" ன்னு நேரலையிலேயே காகிதங்களைத் தூக்கி எறிவார்....
அந்த ஆலோசகர் பேசப் பேச, அதன் விளைவுகள் நேரடியாக வீட்டில் அரேங்கேறும்... இவன் அப்பா, அந்த ஆலோசகரையே மிஞ்சி விடுவார்... பாத்தியா.. 1100 மார்க் எடுக்கணும்...! கேட்டியா... 190 க்கு மேல கட் ஆப் எடுக்கணும்...! புரிஞ்சதான்னு ஆலோசனையும் அறிவுரையும் கோபமும் எரிந்து விழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்... ஒரு வாரம் மட்டுமில்லை.. ஒவ்வொரு வாரமும் இதே தான் நடக்கும்...
ஒவ்வொரு வாரமும் அந்த நிகழ்ச்சி முடியும் தருணத்தில், இவன் இன்று சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்து கலங்கிய கண்களை யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் மாடிக்குச் சென்று விடுவான்... எல்லாரும் உறங்கியப் பிறகு தான் கீழே வருவான்...
இத்தனைக்கும் இவன் ஓரளவுக்குப் படிக்கக் கூடியவன் தான்.. ஆனாலும் அப்பாவின் இந்த செயல்களால் படிப்பதில் எப்பவுமே வெறுப்படைந்து இருப்பான்...
ஒருவழியாக இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டான்... அப்பாவிற்கு அளவிட முடியாத மகிழ்ச்சி... இவனுக்கு அதைவிட பயங்கர மகிழ்ச்சி ...அந்த மகிழ்ச்சி இனிமேல் அந்த நிகழ்ச்சியிருந்து விடுதலை என்பதற்காக மட்டும் தான்...
அப்பாவின் இந்தச் செயல்களினால்தான் இவன் மதிப்பெண் அதிகரித்திருந்தது... அதில் சந்தேகம் ஏதும் இல்லை.. ஆனால் இவனுக்கு மதிப்பெண்ணின் மீதான மதிப்பு குறைந்திருந்தது... ஏற்கனவே இவனுக்கும் அப்பாவிற்கும் இடையே பல்லிலுத்துக் கொண்டிருந்த இடைவெளி, இதனால் பாய்ப் போட்டு நன்றாக கால்களை விரித்துப் படுத்துக் கொண்டது...
அந்த நாட்கள், இவன் வாழ்க்கையில் வெறுக்கப்பட்ட நாட்கள் பட்டியலில் என்றுமே இருக்கின்றன...
இப்பொழுதும் மதிப்பெண் சான்றிதழ்களைப் பார்க்கும் போது, இவன் இழந்த சந்தோசங்கள், உண்ண மறுத்த இரவு உணவு, கண்ணீர் தந்து தூங்க வைத்த கண்கள் என அந்த நாட்களின் நரகத் தன்மையை ஒரு நிமிடம் மின்னல் போல காட்டிவிட்டுச் செல்லும்...
கார்த்திக் பிரகாசம்...
காரணம் அப்போது புதன் கிழமை தோறும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த "கல்வி ஆலோசனை நேரம்" என்ற ஒரு மணி நேர நிகழ்ச்சி...!
அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக, இவன் புதன் கிழமைகளையே வெறுத்துக் கொண்டிருந்தான்... நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் இவன் அப்பா எங்கிருந்தாலும், எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விடுவார்.. அதை இப்படியும் சொல்லலாம்.. இவனும் எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்தாக வேண்டும்...
அடுத்த ஒரு மணி நேரம், அந்தப் பிரபல ஆலோசகர் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிப்பார்... நடுவே நடுவே, "ஆவேசமாக 1000 மார்க்குகெல்லாம் எந்த காலேஜ்'ம் கிடைக்காது... 190 கட் ஆப் இல்லனா கவுன்சலிங் போறதே வேஸ்ட்... அது இது" ன்னு நேரலையிலேயே காகிதங்களைத் தூக்கி எறிவார்....
அந்த ஆலோசகர் பேசப் பேச, அதன் விளைவுகள் நேரடியாக வீட்டில் அரேங்கேறும்... இவன் அப்பா, அந்த ஆலோசகரையே மிஞ்சி விடுவார்... பாத்தியா.. 1100 மார்க் எடுக்கணும்...! கேட்டியா... 190 க்கு மேல கட் ஆப் எடுக்கணும்...! புரிஞ்சதான்னு ஆலோசனையும் அறிவுரையும் கோபமும் எரிந்து விழுவதும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்... ஒரு வாரம் மட்டுமில்லை.. ஒவ்வொரு வாரமும் இதே தான் நடக்கும்...
ஒவ்வொரு வாரமும் அந்த நிகழ்ச்சி முடியும் தருணத்தில், இவன் இன்று சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்து கலங்கிய கண்களை யாருக்கும் காட்டிக் கொள்ளாமல் மாடிக்குச் சென்று விடுவான்... எல்லாரும் உறங்கியப் பிறகு தான் கீழே வருவான்...
இத்தனைக்கும் இவன் ஓரளவுக்குப் படிக்கக் கூடியவன் தான்.. ஆனாலும் அப்பாவின் இந்த செயல்களால் படிப்பதில் எப்பவுமே வெறுப்படைந்து இருப்பான்...
ஒருவழியாக இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துவிட்டான்... அப்பாவிற்கு அளவிட முடியாத மகிழ்ச்சி... இவனுக்கு அதைவிட பயங்கர மகிழ்ச்சி ...அந்த மகிழ்ச்சி இனிமேல் அந்த நிகழ்ச்சியிருந்து விடுதலை என்பதற்காக மட்டும் தான்...
அப்பாவின் இந்தச் செயல்களினால்தான் இவன் மதிப்பெண் அதிகரித்திருந்தது... அதில் சந்தேகம் ஏதும் இல்லை.. ஆனால் இவனுக்கு மதிப்பெண்ணின் மீதான மதிப்பு குறைந்திருந்தது... ஏற்கனவே இவனுக்கும் அப்பாவிற்கும் இடையே பல்லிலுத்துக் கொண்டிருந்த இடைவெளி, இதனால் பாய்ப் போட்டு நன்றாக கால்களை விரித்துப் படுத்துக் கொண்டது...
அந்த நாட்கள், இவன் வாழ்க்கையில் வெறுக்கப்பட்ட நாட்கள் பட்டியலில் என்றுமே இருக்கின்றன...
இப்பொழுதும் மதிப்பெண் சான்றிதழ்களைப் பார்க்கும் போது, இவன் இழந்த சந்தோசங்கள், உண்ண மறுத்த இரவு உணவு, கண்ணீர் தந்து தூங்க வைத்த கண்கள் என அந்த நாட்களின் நரகத் தன்மையை ஒரு நிமிடம் மின்னல் போல காட்டிவிட்டுச் செல்லும்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment