அன்று காதலர்கள் தினம்..
மணி அவசரமாக அவசரமாக பிரியாவைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தான்...
ஏற்கனவே "எப்போ தான்டா வருவ" ன்னு இரவில் இருந்து பத்து முறைக்கு மேல் போன் செய்து விட்டாள்...
பதிமூன்று வருடங்கள் நட்புக்குள் இருந்த அவர்களது உறவும், உணர்வும் மூன்று வருடங்களுக்கு முன்தான் காதலுக்கு இடம் பெயர்ந்தன..
பத்து வருடங்களாய் நண்பர்கள் தினத்தன்று தவறாமல் சந்தித்துக் கொண்டிருந்த அவர்கள், மூன்று வருடங்களாய் காதலர் தினத்தன்றும் தங்கள் கடமையைப் பின்பற்ற தொடங்கினர்.. இரு வீட்டின் சம்மதத்துடன் இருவரும் சுதந்திரமாய் காதலித்துக் கொண்டிருந்தனர்...
இந்த வருடம், எந்தவொரு காதலனும் காதலிக்குத் தந்திடாத ஒரு வித்தியாசமான பரிசைத் தரவிருப்பதாக பிரியாவிடம் மணி கூறியிருந்தான்...
அந்த எதிர்பார்ப்பின் மிகுதியால் நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து கொண்டே இருந்தாள் பிரியா...
ஒருவழியாக பிரியாவின் வீட்டை அடைந்தான்... பைக்கின் ஹார்ன் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள் பிரியா.. இவன் அவளுக்குப் பிடித்த நீல நிறத்தில் சட்டை அணிந்திருந்தான்.. அவள் இவனுக்குப் பிடித்த "அரக்கு வண்ணத்தில்" சேலை அணிந்திருந்தாள்..
அழகான மௌனத்தில், இருவரின் கண்களும் தங்கள் காதலை முதல் முறை காண்பது போல, தங்களின் "காதலர் தின வாழ்த்துக்களை" காதலர்களின் அலைவரிசையில் பரிமாறிக் கொண்டிருந்தன... காதலில் மட்டும் தான் பல தடவை கழித்து பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போலவும், எல்லாம் பேசி முடித்தாலும் இன்னும் பேச ஏதோ இருப்பது போலவும் நிஜமும்,நிழலும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கும்...அந்த விளையாட்டில் இருவரும் காதல் பிள்ளைகளாய் விளையாடிக் கொண்டிருந்தனர்...
"உள்ள வாப்பா..." பிரியாவின் அம்மா குரலில் இருவரின் காதல் அலைவரிசை தற்காலிமாக நிறுத்தப்பட்டது...
"இல்ல மா.. டைம் ஆச்சு... பிரியா வா போலாம்"... மணி அவசரபடுத்தினான்..
எங்கடா போகப் போறோம்...?
என்னடா கிப்ட் தரப் போற..? மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டே இருந்தாள்...
ஐந்து கிலோ மீட்டர் தள்ளிப் போய் அவன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு தோப்புக்குள் பைக்கை நிறுத்தினான்... பையில் வைத்திருந்த "மரக்கன்று" ஒன்றை, ஏற்கனவே பரித்திருந்த குழியில் நட சொன்னான்.. அவளும் கேள்வி கேக்காமல், சொன்னதை செய்தாள்...
பிரியாவின் கண்கள் மணியையேப் பார்த்து கொண்டிருந்தன.. பின்பு மணி சொன்னான்... இந்த "மரக்கன்று" தான், நான் உனக்கு தரும் காதல் பரிசு... இதை ஒழுங்காகப் பராமரித்து மரமாக்க வேண்டியது உன் பொருப்பு.. இது தான் நம் குழந்தை... நம் முதல் குழந்தை.. ஒவ்வொரு காதலர் தினத்தன்றும், நாம் நமக்கென்று ஒரு குழந்தையை நட்டு வைத்துக் கொள்வோம்.. உனக்கு முன் நான் இறந்துவிட்டால் இந்த மரங்கள் உனக்கு நிழல் தரும்... ஒருவேளை எனக்கு முன் நீ இறந்துவிட்டால் இந்த மரங்கள் எனக்கு ஆறுதல் தரும்..
நாம் இருவரும் இறந்த பின்னர், இவை நம் பிள்ளைகளுக்கு உணவளிக்கும்.. வாழ்வாதாரத்தைப் பேணிக் காக்கும்.. மொத்தத்தில் நாம் இருந்து செய்ய வேண்டியதை, இந்த மரங்கள் நம் பிள்ளைகளுக்குச் செய்யும்..
இந்த மரக்கன்றுகள் நாளை பெரிய மரமாக வளர்ந்து, அவற்றின் கிளைகள் அசையும் ஒவ்வொரு அசைவிலும், தீராத நம் காதலின் தாகமும், பசுமையான நம் நட்பின் தருணங்களும் நிறைந்திருக்கும்... அவை வெளியிடும் ஒவ்வொரு துளிக் காற்றிலும் நம் இருவரின் மூச்சுக்காற்று ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும்...
பிரியா அழவில்லை ஆனால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது... அந்த கண்ணீர்த் துளியை தன் கைகளில் ஏந்திப் பிடித்தான்... ஏந்திய கண்ணீரை அந்த மரக்கன்றின் மண் பகுதியில் செலுத்தினான்...முதல் துளியை ருசித்த பரவசத்தில் மரக்கன்று சிலிர்த்தது...
மணியின் கண்ணீரை பிரியா துடைக்க, அவன் அவளை அணைக்க, அவளும் அவனை இறுகப் பற்றிக்கொள்ள வெட்கத்தில் தலைக் குனிந்தது மரக்கன்று...
கார்த்திக் பிரகாசம்...
மணி அவசரமாக அவசரமாக பிரியாவைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தான்...
ஏற்கனவே "எப்போ தான்டா வருவ" ன்னு இரவில் இருந்து பத்து முறைக்கு மேல் போன் செய்து விட்டாள்...
பதிமூன்று வருடங்கள் நட்புக்குள் இருந்த அவர்களது உறவும், உணர்வும் மூன்று வருடங்களுக்கு முன்தான் காதலுக்கு இடம் பெயர்ந்தன..
சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள் பிரியா.. அவளது தந்தை இறந்த கால கட்டத்தில் தான், அவனது நட்பு அவளை தன் தோளில் அரவணைக்கத் தொடங்கியது...
பத்து வருடங்களாய் நண்பர்கள் தினத்தன்று தவறாமல் சந்தித்துக் கொண்டிருந்த அவர்கள், மூன்று வருடங்களாய் காதலர் தினத்தன்றும் தங்கள் கடமையைப் பின்பற்ற தொடங்கினர்.. இரு வீட்டின் சம்மதத்துடன் இருவரும் சுதந்திரமாய் காதலித்துக் கொண்டிருந்தனர்...
இந்த வருடம், எந்தவொரு காதலனும் காதலிக்குத் தந்திடாத ஒரு வித்தியாசமான பரிசைத் தரவிருப்பதாக பிரியாவிடம் மணி கூறியிருந்தான்...
அந்த எதிர்பார்ப்பின் மிகுதியால் நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து கொண்டே இருந்தாள் பிரியா...
ஒருவழியாக பிரியாவின் வீட்டை அடைந்தான்... பைக்கின் ஹார்ன் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள் பிரியா.. இவன் அவளுக்குப் பிடித்த நீல நிறத்தில் சட்டை அணிந்திருந்தான்.. அவள் இவனுக்குப் பிடித்த "அரக்கு வண்ணத்தில்" சேலை அணிந்திருந்தாள்..
அழகான மௌனத்தில், இருவரின் கண்களும் தங்கள் காதலை முதல் முறை காண்பது போல, தங்களின் "காதலர் தின வாழ்த்துக்களை" காதலர்களின் அலைவரிசையில் பரிமாறிக் கொண்டிருந்தன... காதலில் மட்டும் தான் பல தடவை கழித்து பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போலவும், எல்லாம் பேசி முடித்தாலும் இன்னும் பேச ஏதோ இருப்பது போலவும் நிஜமும்,நிழலும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கும்...அந்த விளையாட்டில் இருவரும் காதல் பிள்ளைகளாய் விளையாடிக் கொண்டிருந்தனர்...
"உள்ள வாப்பா..." பிரியாவின் அம்மா குரலில் இருவரின் காதல் அலைவரிசை தற்காலிமாக நிறுத்தப்பட்டது...
"இல்ல மா.. டைம் ஆச்சு... பிரியா வா போலாம்"... மணி அவசரபடுத்தினான்..
"மா.. நான் கிளம்புறேன்"" அவன் சொல்லி முடிக்கும் முன்பே, பிரியா பைக்கில் ஏறினாள்...
எங்கடா போகப் போறோம்...?
என்னடா கிப்ட் தரப் போற..? மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டே இருந்தாள்...
ஐந்து கிலோ மீட்டர் தள்ளிப் போய் அவன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு தோப்புக்குள் பைக்கை நிறுத்தினான்... பையில் வைத்திருந்த "மரக்கன்று" ஒன்றை, ஏற்கனவே பரித்திருந்த குழியில் நட சொன்னான்.. அவளும் கேள்வி கேக்காமல், சொன்னதை செய்தாள்...
பிரியாவின் கண்கள் மணியையேப் பார்த்து கொண்டிருந்தன.. பின்பு மணி சொன்னான்... இந்த "மரக்கன்று" தான், நான் உனக்கு தரும் காதல் பரிசு... இதை ஒழுங்காகப் பராமரித்து மரமாக்க வேண்டியது உன் பொருப்பு.. இது தான் நம் குழந்தை... நம் முதல் குழந்தை.. ஒவ்வொரு காதலர் தினத்தன்றும், நாம் நமக்கென்று ஒரு குழந்தையை நட்டு வைத்துக் கொள்வோம்.. உனக்கு முன் நான் இறந்துவிட்டால் இந்த மரங்கள் உனக்கு நிழல் தரும்... ஒருவேளை எனக்கு முன் நீ இறந்துவிட்டால் இந்த மரங்கள் எனக்கு ஆறுதல் தரும்..
நாம் இருவரும் இறந்த பின்னர், இவை நம் பிள்ளைகளுக்கு உணவளிக்கும்.. வாழ்வாதாரத்தைப் பேணிக் காக்கும்.. மொத்தத்தில் நாம் இருந்து செய்ய வேண்டியதை, இந்த மரங்கள் நம் பிள்ளைகளுக்குச் செய்யும்..
இந்த மரக்கன்றுகள் நாளை பெரிய மரமாக வளர்ந்து, அவற்றின் கிளைகள் அசையும் ஒவ்வொரு அசைவிலும், தீராத நம் காதலின் தாகமும், பசுமையான நம் நட்பின் தருணங்களும் நிறைந்திருக்கும்... அவை வெளியிடும் ஒவ்வொரு துளிக் காற்றிலும் நம் இருவரின் மூச்சுக்காற்று ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும்...
பிரியா அழவில்லை ஆனால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது... அந்த கண்ணீர்த் துளியை தன் கைகளில் ஏந்திப் பிடித்தான்... ஏந்திய கண்ணீரை அந்த மரக்கன்றின் மண் பகுதியில் செலுத்தினான்...முதல் துளியை ருசித்த பரவசத்தில் மரக்கன்று சிலிர்த்தது...
மணியின் கண்ணீரை பிரியா துடைக்க, அவன் அவளை அணைக்க, அவளும் அவனை இறுகப் பற்றிக்கொள்ள வெட்கத்தில் தலைக் குனிந்தது மரக்கன்று...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment